மகளிர்நல மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் அறுவைச்சிகிச்சை முறைகளில் சமீபத்தில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் காரணமாக நோயாளியின் ஆரோக்கியமும், குணமடையும் நேரமும் மேம்பட்டுள்ளன. லேப்ராஸ்கோபி மற்றும் ரோபோ-உதவி கொண்டு செய்யப்படும் அறுவைச்சிகிச்சைகள் போன்ற குறைந்தபட்ச ஊடுருவும் தொழில்நுட்பங்கள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன், அதன் பக்க விளைவுகளும் குறைவு. ஹார்மோன் சிகிச்சைகளில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் எண்டோமெட்ரியோசிஸ் மற்றும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) போன்ற நிலைமைகளுக்கு மிகவும் பயனுள்ள சிகிச்சைகளை வழங்குகின்றன. குறைந்தபட்ச-ஊடுருவும் அறுவைச்சிகிச்சைச் தொழில்நுட்பங்கள் குறைந்தபட்ச ஊடுருவல் கொண்ட அறுவைச்சிகிச்சை தொழில்நுட்பங்களான லேப்ராஸ்கோபி மற்றும் ரோபோடிக் அறுவைச்சிகிச்சை…
Read Moreநடைப்பயிற்சி ஒரு வரப்பிரசாதம்!
நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த நடைபயிற்சி ஒரு சிறந்த வழி. இதயத் துடிப்பை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் இது ஒரு சிறந்த பயிற்சியாகும். நடைப்பயிற்சி மேற்கொள்ள பிரத்தியேக துணைப்பொருட்கள் எதுவும் தேவையில்லை; வாக்கிங் ஷூ அணிந்தால் சௌகரியமாக இருக்கும் ஆனால் அது கட்டாயமில்லை. உங்கள் வீட்டைச் சுற்றியுள்ள தெருக்களிலோ அல்லது உங்கள் வீட்டினுள் சுற்றியுள்ள தோட்டத்திலோ அல்லது மொட்டை மாடியிலோ கூட நடக்கலாம். துணைக்கு உங்கள் நண்பர்கள், குடும்பத்தார், அல்லது செல்ல நாயை அழைத்துக் கொள்ளலாம்; அல்லது…
Read Moreஉறைந்த தோள்பட்டையை (ஃப்ரோஸன் ஷோல்டர்) புறக்கணிக்காதீர்கள்!
அவசர கதியில் இயங்கும் நவீன சமுதாயத்தின் தவிர்க்க முடியாத விளைவுகளில் ஒன்றாக தோள்பட்டை வலி மற்றும் விறைப்பு (“உறைந்த தோள்பட்டை” அல்லது “தாளிறுக்க நோய்” என்று அழைக்கப்படுகிறது) கருதப்படுகிறது. நாம் நாள் முழுவதும் அமர்ந்து கொண்டே வேலை செய்கிறோம், அத்துடன் நம் அன்றாட வாழ்க்கையில் குறைந்தபட்ச உடற்செயல்பாடு மற்றும் எதிர்பாராத அளவு அதிக மன அழுத்தம் ஆகியவற்றை எதிர்கொள்கிறோம், இவை அனைத்தும் நம் உடலை எதிர்மறையாக பாதிக்கின்றன. வலி அதிகமாகும் போது “இனி முறையாக உடற்பயிற்சி செய்ய…
Read Moreசெவித்திறன் இழப்பு – காரணங்கள் மற்றும் தடுப்பு
நமது செவித்திறன் வயதாக ஆக குறைகிறது என்பதுடன், பொதுவாக 75 வயதுக்கு மேற்பட்டவர்களில் இது அதிகமாக காணப்படுகிறது. செவிப்புலன் அமைப்பின் எந்தவொரு பகுதியும் சரியாக வேலை செய்யவில்லை என்றாலும் அதை செவித்திறன் இழப்பு என்கிறோம். வெளிப்புற காது, நடுப்புற காது, உட்புற காது, செவிப்புலன் நரம்பு மற்றும் மூளையில் உள்ள செவிவழி பாதைகள் ஆகியவை இதில் அடங்கும். இரண்டு காதுகளிலும் செவித்திறன் இழப்பு ஏற்படலாம் அல்லது ஒரு காதில் மட்டுமே ஏற்படலாம். மேலும் இரண்டு காதுகளின் கேட்கும்…
Read Moreஆஸ்துமாவுடன் வாழ்வது – நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
ஆஸ்துமா என்றால் என்ன? ஆஸ்துமா என்பது நுரையீரலைப் பாதிக்கும் ஒரு நாட்பட்ட நோய். இதன் விளைவாக சுவாசப்பாதைகள் குறுகலாம், வீங்கலாம், அதிகப்படியான சளி அடைப்பு ஏற்படலாம் மற்றும் அதைச் சுற்றி தசை இறுக்கம் ஏற்படலாம்; இதன் காரணமாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. உலக அளவில் ஆஸ்துமா 262 மில்லியன் மக்களை பாதிக்கிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது, அதிலும் குறிப்பாக கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். ஆஸ்துமாவை குணப்படுத்த முடியாது என்றாலும் அதன் அறிகுறிகளை நாம் கட்டுக்குள் வைத்திருக்க…
Read More